இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 23,727 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாத்திரம் இதுவரை 142798 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
மகாராஸ்டிரா மாநிலத்திலேயே அதிக உயிரிழப்பும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் மொத்தம் 10482 பேர் பலியாகியுள்ளனர். 260924 பேர் இதுவரை பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர்.
Lanka Newsweek © 2026